Sunday, 10 February 2013

காந்திப் படுகொலையும் , கோட்ஸே சொல்லும் காரணகளும்




சுதந்திர இந்தியா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ஆம் தேதியை காந்தி பிறந்த தினமாகவும், ஜனவரி 30-ஆம் தேதியை இரத்தசாட்சி தினமாகவும் அனுஷ்டித்து வருகிறது. ஆனால், காந்தி ஏன் கொல்லப்பட்டார்? என்பது மறந்துபோன ஒன்றாக மாறிவிட்டது.

காந்தி என்ற மகாத்மா, அவரைக் கொன்ற கொலைகாரன் கோட்ஸே, அவனது கும்பல் பரப்புரைச் செய்த அரசியல் சித்தாந்தம், அன்று நீடித்த தேசிய சூழல், சர்வதேச சூழல்கள், நீதிமன்றத்தில் கோட்ஸே வெளியிட்ட காரணங்கள்-ஆகியவற்றை இணைக்க முயன்றால் பல இடங்களில் பொருத்தமில்லாமையை நாம் உணரலாம். ஆகையால் காந்தி படுகொலை குறித்த மீளாய்வில் கூடுதலாக ஏதேனும் கூறவேண்டியது அவசியமாகும்.

1966-ஆம் ஆண்டுவரை காந்தி படுகொலை குறித்த ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டதற்கு மக்களின் மறதிக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதுதான் காரணமா?

1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி மாலை 5.10 க்கு பிர்லா ஹவுஸிலிருந்து பிரார்த்தனை ஹாலிற்கு புறப்பட்டுச் சென்ற காந்தியடிகளை வினாயக் நாதுராம் கோட்ஸே என்பவன் வழியில் தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். கோட்ஸேயை தவிர காந்தியடிகளுடன் வந்தவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். தப்பிக்க கூட முயலாமல் கோட்ஸே தனது இரு கரங்களையும் நீட்டி போலீசாரை அழைத்து தன்னை கைது செய்ய கோரினான்.

பின்னர் நடந்த விசாரணையில் கோட்ஸே நீதிமன்றத்தில் 5 மணிநேரம் கொலையை நியாயப்படுத்தி வாக்குமூலம் அளித்தான். காந்தியை கொலை செய்தது குறித்து பெருமைக் கொள்வதாகவும், இக்கொலை முன்னரே நிகழ்த்தியிருக்க வேண்டியது எனவும் கூறினான்.

கோட்ஸே காந்தியை கொலைச் செய்ய கூறிய முக்கிய காரணங்களை பார்ப்போம்:

1.‘ஹிந்து-முஸ்லிம் பிரச்சனைகளில் காந்தி முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்.

2. ஜின்னாவின் தேசப் பிரிவினைக்கு ஆதரவளித்தார்.

3.பிரிவினைக்கு பிறகும் அரசு கருவூலத்திலிருந்து பங்குத் தொகையான 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அளிக்கவேண்டும் என காந்தி இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்தார்.

4. பிரிவினையை தொடர்ந்து உருவான கலவரத்தில் காந்தி ஹிந்துக்களை நிராயுதபாணிகளாக மாற்றினார்.

5.காந்தி பாகிஸ்தானின் தேசத் தந்தையாவார்.’

என்பதாகும்.

கோட்ஸேவின் இக்கூற்று உண்மைக்கு உகந்ததா?
என்பதை ஆராய நீதிமன்றம் தயாராகவில்லை. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி நீதிமன்றம் தண்டனையை வழங்கியது.

கோட்ஸே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்கு மரணத் தண்டனையும், இதர நான்கு பேருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டன. சாவர்க்கர் மீதான குற்றத்திற்கு ஆதாரமில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. காந்தி படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சவர்க்கரை குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் விடுதலைச் செய்தது விவாதத்தை கிளப்பியது.

பின்னர் காந்தி படுகொலையை குறித்து மறுவிசாரணை நடத்திய கபூர் கமிஷன் கண்டறிந்தது என்னவெனில் காந்தி படுகொலையில் சாவர்க்கர் முக்கிய சூத்திரதாரி என்பதாகும். இதுக்குறித்து மீண்டும் ஆய்வுச்செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். விசாரணையின் போது காந்திக்கு எதிராக கோட்ஸே முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை குறித்து புரிந்துக் கொள்வதற்கான மீளாய்வை காந்தியிலிருந்தே நாம் துவங்குவோம்.


1947-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘ஹிந்துராஷ்ட்ரா’ என்ற நாளிதழில் கோட்ஸே இவ்வாறு எழுதினான்:

‘சகோதரர்களே! நமது தேசம் துண்டிக்கப்பட்டுவிட்டது!’

பின்னர் காந்திக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக எழுதுகிறான்,

‘பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததன் மூலம் நீங்கள் பாரதத்தின் நெஞ்சத்தை கோடாரியால் பிளந்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றவில்லையெனில் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிவரும்’.

ஆனால் நாடு பிரிவினையை குறித்து வரலாறு கூறுவது இதற்கு மாற்றமானதாகும். தேசப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர் காந்தியடிகள் ஆவார். காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகள் பல பத்தாண்டுகளுக்கு முன்பே பிரிவினைக்கு ஆதரவான சூழலை வளர்த்துக்கொண்டு வந்தனர்.

1921-ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ‘ஹிந்துத்துவா’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார், ’ஹிந்துவும், முஸ்லிமும் இரண்டு தேசங்கள் ஆவர்’.

1923-ஆம் ஆண்டு ஹிந்து மகாசபையின் மாநாட்டில் மதன்மோகன் மாளவியா உரை நிகழ்த்தினார். அதில் அவர்,’இந்தியா ஒருபோதும் ஒரு ஒன்றிணைந்த தேசம் அல்ல’ என தெரிவித்தார்.

1924-ஆம் ஆண்டு லாலா லஜபதிராய் ‘த ட்ரிப்யூன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது என்னவெனில், ’இந்தியா தனி நாடல்ல’ என்பதாகும்.

1937-ஆம் ஆண்டு கோட்ஸேவின் சித்தாந்த குரு சவர்க்கர் அஹ்மதாபாத்தில் நடந்த ஹிந்து மகாசபை மாநாட்டில் கூறியது என்னவெனில், ’இந்தியாவால் ஒரு ஒன்றிணைந்த நாடாக மாற இயலாது’ என்பதாகும். இந்த கருத்துக்களையெல்லாம் காந்தி அங்கீகரிக்கவில்லை.

1940-ஆம் ஆண்டு லாகூர் தீர்மானத்தின் மூலம் முஸ்லிம் லீக் ’பாகிஸ்தான்’ என்ற வாதத்தை முன்வைத்தது. இதனையும் காந்தியடிகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால்,

1945-ஆம் ஆண்டு காங்கிரஸைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் பிரிவினைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அப்பொழுது கூட காந்தி பிரிவினையை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார்.

ஒரு கட்டத்தில் ஜின்னாவை பிரதமராக்கி பிரிவினையை தவிர்க்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். அதேவேளையில், ஷியாம்பிரசாத் முகர்ஜி போன்ற காலனியாதிக்க ஹிந்துத்துவாவாதிகள் பிரிவினைக்கான ரகசிய செயல்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

முஸ்லிம்களும், தலித்துகளும் ஒன்றிணைந்தால் உயர் ஜாதியினர் அதிகாரத்தின் படிக்கட்டுகளுக்கு வெளியே சென்றுவிடக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என ஷியாம் பிரசாத் முகர்ஜி அஞ்சினார். இறுதியாக தலைபோனாலும் பரவாயில்லை, தலைவலி மாறினால் போதும் என்ற முடிவை காங்கிரஸ் செயற்குழு எடுத்தது. அங்கேதான் காந்தி மெளனியாக மாறினார்.

கோட்ஸே நீதிமன்றத்தில் வரலாற்றை வளைத்ததற்கு காரணம் ஏதோ ஒன்றை மூடி மறைப்பதற்காகும். கோட்ஸே காந்தி படுகொலைக்கு கூறிய அடுத்த காரணம்,

அரசு கருவூலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பங்கான 55 கோடி ரூபாயை இந்தியா முடக்கி வைத்தபோது காந்தி தலையிட்டு பாகிஸ்தானுக்கு அப்பணத்தை கொடுக்கவேண்டும் என கூறினார் என்பதாகும்.

இங்கே புரியாத காரணம் என்னவெனில், நாட்டை பிரிப்பதற்கான திட்டங்களை தீட்டிய சங்க்பரிவாரத்திற்கு நாடு துண்டாடப்பட்டதை விட பெரிதா 55 கோடி ரூபாய்? என்பதாகும்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை அந்நாட்டிற்கு வழங்கவேண்டும் என காந்தி கூறியது அவரை கொலைச்செய்ய எவ்வாறு காரணமாகும்? அவ்வாறெனில் நானூறு ஆண்டுகள் இந்தியாவை காலனியாதிக்க நாடாக மாற்றி ஆட்சிபுரிந்த பிரிட்டீஷார் இந்தியாவின் பெரும் செல்வங்களை கொள்ளையடித்தனர். ஆனாலும், சங்க்பரிவாரத்திற்கு ஏன் பிரிட்டீஷாரின் மீது துவேசம் ஏற்படவில்லை? 55 கோடி ரூபாய் விவகாரத்தில் காந்தி யாரையும் திருப்திப்படுத்துவதற்காக செயல்படவில்லை. மாறாக, உண்மை என்று தான் கருதியதை ஆதரித்ததேயாகும்.

அடுத்த காரணமாக கோட்ஸே கூறியது, முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே காந்தி குறியாக இருந்தார் என்பதாகும். “பிரிவினையைத் தொடர்ந்து நடந்த வகுப்பு கலவரத்தில் காந்தி ஒருதலைபட்சமாக ஹிந்துக்களிடம் கலவரத்திலிருந்து விலகுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணர்வுக்கு பலியாகினர்”. இதிலும் உண்மை கோட்ஸேவிற்கு எதிராகவே அமைந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு 1947-ஆம் ஆண்டு வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், “கலவரத்தின் பின்னணியில் அதிகமாக செயல்படுவது ஹிந்துக்களும், சீக்கியர்களும்தான்” என தெரிவித்துள்ளார்.

எந்த வன்முறையையும் எதிர்க்கவேண்டும் என்பது காந்தியின் அகிம்சை கொள்கையின் ஒரு பகுதியாகும். வன்முறை உருவானதன் காரணமாக ஒரு கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை கூட காந்தி நிறுத்தி வைத்தார்.

1921-ஆம் ஆண்டு ஒத்துழையாமை போராட்ட வேளையில் சவுரிசவ்ரா என்ற இடத்தில் வன்முறை வெடித்தபொழுது காந்தி போராட்டத்தை வாபஸ் பெற்றார். கிலாஃபத்தின் நிழலில் வளர்ந்துவந்த கேரளாவின் மாப்பிள்ளைகள் போராட்டத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாக கேள்விப்பட்ட வேளையில் மலபார் போராட்டத்தை காந்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இவ்விவகாரத்தில் கோட்ஸே உண்மையை மூடி மறைத்துள்ளார்.

இந்நிலையில், கோட்ஸே கூறிய காரணங்களெல்லாம் பொய்யானவையாக இருக்கும்போது ஒரு கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. ஏன் காந்தி கொல்லப்பட்டார்? என்பதுதான் அக்கேள்வி.

இதனைப் புரிந்துக்கொள்ள வேண்டுமெனில் ஏகாதிபத்திய-சியோனிஷ்டுகளுடன் சங்க்பரிவார்களுக்கு இருந்த ரகசிய உறவை அடையாளம் காணவேண்டும்.

சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் வளர்த்தது தேசிய ஹிந்துத்துவ அரசியல் அல்ல. மாறாக ஏகாதிபத்திய-சியோனிஷ விருப்பங்களை பாதுகாக்கும் காலனியாதிக்க ஹிந்துத்துவா அரசியலாகும்.

அது ஒரு ஏகாதிபத்திய கொள்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும் மாற்றியமைத்து தங்களுக்கு சாதகமான காலனியாதிக்க மனோநிலையை உருவாக்குவதுதான் இவர்களது திட்டம். அதற்காக புதிய அமைப்புகள், மதங்கள், மனித தெய்வங்கள் என எதனையும் ஏகாதிபத்திய சக்திகள் உருவாக்கும்.

காங்கிரஸ் என்றதொரு இயக்கத்தை உருவாக்கியது ஏ.ஓ.ஹ்யூம் என்ற பிரிட்டீஷ் காரர் ஆவார் என்பது இங்கே சிந்திக்கவேண்டிய விஷயமாகும்.

இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து ‘காதியானிசம்’ என்றதொரு காலனியாதிக்க பிரிவை உருவாக்கினர்.

அதுபோலவே சங்க்பரிவார் என்ற காலனியாதிக்க ஹிந்துதுத்துவா இயக்கமும் உருவானது.

நாத்திகவாதியான சாவர்க்கர் தனது இளமைப் பருவத்தில் பிரிட்டீஷ் எதிர்ப்பு போராட்டங்களில் விருப்பங்காட்டினார்.

1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராட்டத்தைக் குறித்து சாவர்க்கர் 1909 ஆம் ஆண்டு ஒரு நூலை எழுதினார். அதில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஐக்கியத்துடன் போராடியதை குறிப்பிடுகிறார். மேலும் முஸ்லிம்கள் செய்த தியாகத்தை தனியாக பாராட்டி எழுதியுள்ளார்.

பின்னர் உயர்கல்வியை கற்பதற்காக சவர்க்கர் பிரிட்டனுக்கு சென்றார். ஆனால், அங்கே அவர் சற்று தீவிரமாக இந்திய அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்க்கரின் நண்பர் ஒரு பிரிட்டீஷ்காரரை கொலைச்செய்த வழக்கில் சாவர்க்கரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். விசாரணையில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனையை விதித்தது. இதனைத் தொடர்ந்து அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வைத்து அவரது அரசியல் சித்தாந்தம் மாற்றம் அடைந்தது.

வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிப்பதை விரும்பாத சாவர்க்கர் பிரிட்டீஷ் அரசுடன் சமாதானமாக செல்லும் நோக்கில் மன்னிப்பு கடிதத்தை எழுதினார்.

பிரிட்டீஷ் எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து விலகுவதும், மீதமுள்ள காலத்தை பிரிட்டீஷாருக்கு சேவை புரிவதில் கழிப்பதும் அக்கடிதத்தின் உள்ளடக்கமாகும்.

1913-ஆம் ஆண்டு அந்தமான் சிறையை பார்வையிட சென்ற பிரிட்டீஷ் அதிகாரி ஸர் ரெஜினால்ட் க்ராடக்குடன் சாவர்க்கர் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தினார். இதன் பலனாக, சிறையில் படிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபடவும், வெளி உலகத்துடன் தொடர்புக் கொள்ளவும் அதிக சுதந்திரம் அவருக்கு கிடைத்தது. இவ்வாறு அந்தமான் சிறையில் வைத்து

1921-ஆம் ஆண்டு சவர்க்கர் ‘ஹிந்துத்துவா’ என்ற நூலை எழுதினார். ’ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தேசமல்ல’ என்ற வாதத்தை இந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்.

1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவானபோது சாவர்க்கர் சிறையில் இருந்தார். அவ்வியக்கத்தின் துவக்க விழாவில் பங்கேற்க தனது பிரதிநிதியாக தனது சகோதரர் கோபால் கோட்ஸேவை அனுப்பி வைத்தார்.

சங்க்பரிவாரத்தின் ‘காந்தி எதிர்ப்பு’ கொள்கை பிரிவினையின் பிறகு உருவானதல்ல.

1926-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் ஹெட்கேவார், ”காந்தியின் அகிம்சை வழி நாட்டில் அதிகரித்துவரும் ஆவேசத்தை கெடுத்துவிடுகிறது. ஆகையால் காந்தியை ஆதரிக்க இயலாது” என தெரிவித்தார்.

ஆனால், மறுபுறம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் ஆயுத போராட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது. இதற்கான காரணத்தை ஆர்.எஸ்.எஸ் விளக்கவில்லை. காங்கிரஸ் நடத்திய அனைத்து போராட்டங்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது.

ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் "ஆர்.எஸ்.எஸ் முதுகில் குத்தியது."

இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி பிரிட்டீஷ் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், ”போர் உறுதியாகிவிட்டது. இக்கட்டத்தில் காங்கிரஸ் போராட்டத்தை வலுப்படுத்தினால் பிரிட்டீஷ் அரசு அதனை கடுமையாக எதிர்கொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.

1948-ஆம் ஆண்டு காந்தி படுகொலையின் விசாரணை வேளையில் கோட்ஸே கூறியவை 1947-ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையவனவாகும். அவ்வாறெனில், 1944-ஆம் ஆண்டு காந்தியை கொல்ல ஏன் கோட்ஸே விரும்பினார்? சுருக்கமாக கூறவேண்டுமெனில், கோட்ஸே காந்தியை படுகொலைச் செய்ய தூண்டியதற்கு கூறிய காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

மனிதர்களை நேசித்த காந்தியடிகளுக்கு ஹிந்து விரோதமோ, முஸ்லிம் விரோதமோ, பிரிட்டீஷ் விரோதமோ இல்லை.

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் வேளையிலும் நெருக்கடியான காலக்கட்டங்களில் பிரிட்டீஷாருக்கு உதவியுள்ளார். பிரிட்டனுக்கும், டச்சுக்காரர்களுக்கும் (நெதர்லாந்து) இடையே நடந்த போவர் போர், முதல் உலகப்போர் ஆகியவற்றில் பிரிட்டீஷாருக்கு ஆதரவாக சேவை புரிந்தார்.

சமூகத்தில் காணப்படும் அநீதி, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பை தனது வாழ்க்கை முறையாக கொண்டவர் காந்தியடிகள். ஆகையால்தான் இருபது ஆண்டுகளாக நீடித்த ஆப்பிரிக்க போராட்டம் முடிந்து இந்தியாவுக்கு திரும்பியதும் ஓய்வெடுக்காமல் பிரிட்டீஷாருக்கு எதிராக போராட துவங்கினார்.


இவ்வேளையில் உலகின் பல இடங்களில் நடந்த அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.


அதில் முக்கியத்துவம் வாய்ந்தது 1938-ஆம் ஆண்டு "சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்ததை எதிர்த்து, அரபுக்களின் உரிமைகளை ஆதரித்து குரல் கொடுத்ததாகும்."

காந்தியின் நிலைப்பாடு சியோனிஸ்டுகளுக்கு சர்வதேச தளத்தில் மிகப்பெரிய தலைவலியாக மாறியது.

அதேவேளையில் சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் சியோனிஸ்டுகளை ஆதரித்தனர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு காந்தி அதிகாரத்தில் பங்கேற்காமல், ஓய்வெடுக்காமல் மற்றொரு போராட்டத்திற்கு செல்வார் என்பதை சியோனிஸ்டுகள் புரிந்துக்கொண்டனர். ஆதலால் காந்திக்கு தடை விதிப்பது அவர்களது முக்கிய தேவையாக இருந்தது.

இந்த பணியை ஏற்றுக் கொண்டவர்கள் இந்தியாவில் சியோனிஸ்டுகளின் நம்பிக்கை பாத்திரமான காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகளாவர்.

காந்தி படுகொலையின் பலனை யார் அனுபவித்தார்கள் என்பதும், யாரெல்லாம் ஆதாயம் பெற்றார்கள் என்பதையும் ஆராயவேண்டும்.

முதலாவதாக, சர்வதேச தளத்தில் பெரும் சலனங்களை உருவாக்கிய காந்தியின் சியோனிஷ எதிர்ப்பு அணைந்து போனது.

இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் காலனியாதிக்க ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் முகத்திற்கு தேசிய ஹிந்துத்துவா முக மூடியை அணியவும் சாத்தியமானது.

தொடர்ந்து உருவாக்கிய முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் கொள்கையின் மூலமாக தாங்கள்தாம் ஹிந்துக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற உணர்வை சாமான்யர்களின் உள்ளங்களில் நிறுவுவதை முக்கிய பணியாக கொண்டு செயலாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மிகப்பெரும் அழிவுசக்தியாக மாறிவருகிறது என்பதை அண்மையில் இந்த தேசத்தை உலுக்கிய குண்டுவெடிப்புகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.



Reference By : விடியல் வெள்ளி அக்டோபர்-2011 & http://www.thoothuonline.com/

Friday, 1 February 2013

10 தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு: மத்திய உள்துறை செயலாளர்!

10 தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு: மத்திய உள்துறை செயலாளர்!

Shinde says, 10 terror-tainted people linked to RSS
புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் பங்கேற்ற குறைந்தது 10 தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணையில் இவர்களின் ஆர்.எஸ்.எஸ் உறவு நிரூபணமானதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியதுபோல ஏதேனும் தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தொடர்புண்டா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய 10 நபர்களின் பெயரையும் அவர் வெளியிட்டார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளுக்கு சூத்திரதாரியான, ஹிந்துத்துவா தீவிரவாதிகளாலேயே கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் பெயரும் இதில் அடங்கும். 2003-ஆம் ஆண்டு வரை சுனில் ஜோஷி தேவாஸ், மாவு ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்காக பணியாற்றியுள்ளான்.
தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹிந்துத்துவா தீவிரவாதி. இவன் மாவு, இந்தூர்,வடக்கு காசி, ஸாஜாபூர் ஆகிய இடங்களில் 2006-ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றியுள்ளான். சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்ட லோகேஷ் சர்மா உள்துறை செயலாளர் வெளியிட்ட மற்றொரு தீவிரவாதி ஆவான்.தியோகர் நகர் ஆர்.எஸ்.எஸ் காரியாவாகாக இவன் பணியாற்றியுள்ளான்.சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளில் முக்கிய சூத்திரதாரியான சுவாமி அஸிமானந்தா 2007 வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்பான வனவாசி கல்யாண் பரிஷத்தின் குஜராத் தலைவராக பணியாற்றியவன்.
சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜேந்தர் என்ற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ் வர்க் விஸ்தாரக்காக பணியாற்றியவன். இவன் கைது செய்யப்பட்டுள்ளான். கோத்ராவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரும், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான முகேஷ் வஸானி, மாவு மற்றும் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றிய தேவேந்தர் குப்தா (மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவன்), 2007-ஆம் ஆண்டு ஷாஜன்பூரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக பணியாற்றிய சந்திரசேகர் லிவே (மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவன்), ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான கமால் சவுகான் (சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதானவன்), ஆர்.எஸ்.எஸ் ஸஹசாரி ராம்ஜி கல்சங்கரா (சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் தலைமறைவு குற்றவாளி) ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் வெளியிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் ஆவர்.

ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து மெளனம் சாதிக்கும் அமெரிக்கா!

புதுடெல்லி:இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தொடர்ந்து இந்தியாவுக்கு முன்னெச்சரிக்கை அளித்து வந்த அமெரிக்கா, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமான பிறகு மெளனம் சாதிக்கிறது.
2006-ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி லஷ்கர்-இ-தய்யிபா தலைவர் முஹம்மது ஆரிஃப் குஸ்மானியை 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீவிரவாதிகளின் பட்டியலில் உட்படுத்தவேண்டும் என சுட்டிக்காட்டி அமெரிக்க தூதரக துணை தூதர் ஜான் பென்னட்ரி இந்தியன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கராச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் குஸ்மானியின் பங்கினை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ஏஜன்சிகள் ஆசுவாசமடைந்தன. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் குற்றவாளிகளை கண்டறிவதில் மாநில போலீசும் தோல்வியை தழுவியிருந்தது.
2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் மற்றும் சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரின் பங்கு வெளியானதை தொடர்ந்து தாக்குதலின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டிருக்கலாம் என ஐ.பி சந்தேகித்தது. ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்த துவங்கியது அக்காலக் கட்டத்தில்தான். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சர்வதேச அளவிலான முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் சி.ஐ.ஏ மற்றும் எஃப்.பி.ஐயிடம் கேள்விகளை எழுப்பினர். தற்போது உண்மையான குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகளை என்.ஐ.ஏ கைது செய்த பிறகும் கேள்விகளுக்கு பதில் அளிக்க அமெரிக்க தயாரில்லை.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் குண்டை வைத்த ஹிந்துத்துவா தீவிரவாதியான ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ராஜேந்திர சவுத்ரியை கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி கைது செய்ததை தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாத குறித்த சித்திரம் தெளிவானது. முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றவேண்டும் என்ற சங்க்பரிவார சித்தாந்தத்தின் வலுவான பிரதிநிதியான சுனில்ஜோஷியின் தலைமையில் ராஜேந்தர், லோகேஷ் சர்மா, டான் சிங், கமல் சவுஹான், அமித் சவுஹான் ஆகியோர் ஒரே கும்பலாக இயங்கினர்.
இவர்களின் பயங்கரவாதத்திற்கு பல ஆண்டுகள் அனுபவம் உண்டு. மத்திய பிரதேச மாநிலம் துங்கர் காவோனில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் 1999-ஆம் ஆண்டு சுனில் ஜோஷியும், ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலும் டெட்டனேட்டர்களை பரிசோதித்தனர் என்று சாட்சிகள் கூறுகின்றனர்.
2001-ஆம் ஆண்டு இக்கும்பல் கன்னியாஸ்திரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. 2002-ஆம் ஆண்டு தப்லீக் ஜமாஅத்தினரை குறிவைத்து போபால் ரெயில்வே ஸ்டேசனில் குண்டை வைத்தனர். 2004-ஆம் ஆண்டு ஜம்முவில் உள்ள மஸ்ஜித் மீது க்ரேனேடை வீசினர். 2004-ஆ ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை மஹராஷ்ட்ராவில் உள்ள மஸ்ஜிதுகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இவ்வளவு தாக்குதல்களை நடத்தியபிறகும் தங்கள் மீது புலனாய்வு ஏஜன்சிகளின் பார்வை திரும்பாததால் அதனை பாதுகாப்பாக கருதி மேலும் மேலும் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்த திட்டம் தீட்டினர். 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நந்தத்தில் வெடிக்குண்டுகளை தயாரிக்கும் வேளையில் குண்டுவெடித்ததில் பஜ்ரங் தளைச் சார்ந்த ஹிமான்ஷு பான்ஸே, நரேஷ் ராஜ்கோண்டவால் ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சங்க்பரிவார தீவிரவாதம் மெல்ல வெளிவரத் துவங்கியது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி மலேகானில் ஒரு மஸ்ஜிதை சுற்றிலும் 4 குண்டுகள் வெடித்தன. ஆனால், விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் போலீஸ் 9 அப்பாவி ‘முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. 2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பிலும், மும்பை ரெயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட அப்பாவிகளையும் போலீஸ் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது.
மலேகானில் சதித்திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகியவற்றின் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்தியது. குண்டுவெடிப்புகளில் உபயோகித்த சிம்கார்டுகளை குறித்த விசாரணை ஜார்க்கண்டில் ஜாமாத்ராவில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் தேவேந்திரா குப்தாவை சென்று அடைந்ததை தொடர்ந்து உண்மை வெளியானது.
ஆனால், பிரக்யசிங் தாக்கூருக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் தேவேந்திர குப்தாவை இயக்கத்தில் இருந்து வெளியேற்றவில்லை. ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் தலைமறைவாக உள்ள ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் கைது செய்யப்பட்டால் மேலும் பல சங்க்பரிவார தீவிரவாதிகள் சிக்குவர்.
thanks to thoothouonline.com